
தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்றது. அதன் பின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம் தேதியிலிருந்தும், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 25ஆம் தேதியிலிருந்தும் கோடை விடுமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 2025-26 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 02.06.2025 அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கல்லூரி கல்வி ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 2025-26 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும், சுயநிதி கல்வி அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.