காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தண்டனை வழங்கப்படும்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒவ்வொருவராக கண்டுபிடித்து வேட்டையாடுவோம். அந்த தீவிரவாதிகள் மட்டுமல்ல அவர்களுக்கு துணை நின்றவர்களும் அழிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி ஆவேசத்துடன் தெரிவித்தார்.