
சென்னை மாவட்டம் போரூரில் 70 வயது மூதாட்டி வசித்து வந்தார். இன்று காலை மூதாட்டியின் வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்ததை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க நகைக்க ஆசைப்பட்டு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியது தெரியவந்தது.
இதனையடுத்து திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.