
இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். சமீப காலமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரிகளை விதித்து வருகிறார். அதை தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் முதல் நாடாக இந்தியா மாறும் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்பட்டது. அந்த வரி விதிப்பு தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
ஜூலை 8-ம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் ஸ்காட் பெசன்ட் கூறியதாவது, இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவை கொண்டு வரும். இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில் தான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றி அமைப்பதில்லை. எனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிக எளிதான விஷயமாக உள்ளது. வரி விதிப்பு விஷயத்தில் பிற நாடுகளும் இதே போன்று நடந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார் என்று தெரிவித்தார்.