
ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பிய பத்து மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.
இதனால் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக முதலமைச்சரானார். உச்ச நீதிமன்றம் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியதால் முதலமைச்சர் பல்கலைக்கழகங்களில்ன் வேந்தரான நிலையில் ஆளுநர் மாளிகை இன்னும் ஆளுநர் தான் பல்கலைக்கழகங்களில் வேந்தராக தொடர்கிறார் என்று அறிக்கை வெளியிட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் பல்கலைக்கழக வேந்தர்கள் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று உதகையில் ஆளுநர் ஆர்.என் ரவி தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 9 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
அப்போது குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தார். இந்நிலையில் இதற்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலளித்துள்ளார். அதாவது முதலமைச்சர் மு க ஸ்டாலின் போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்ட்ரபதி பவன் வரை பதம் பார்த்து விட்டதே என அடிவயிறு எரிந்ததால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார்.
அதோடு ஆளுநர் ரவி துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும் போது தமிழக அரசு நள்ளிரவில் துணை வேந்தர்களை மிரட்டியுள்ளது. இதனால்தான் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட பாதியில் திரும்பி சென்று விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.
அவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை நாடு பார்த்தது. அந்த வழியில் நடக்கும் ஆளுநர் ரவி ஜெகதீப் தன்கரை அழைத்து வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று விமர்சித்தார்.