
வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் தலைமையில், 5,000 டன் எடையுள்ள புதிய அழிப்பான் வகை போர்க்கப்பல் “சோ ஹியோன்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பியோங்யாங் அரசு ஊடகம் தெரிவித்த தகவலின்படி, இந்தக் கப்பல் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏந்தி தரை மற்றும் வானில் இருந்து தாக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய தற்கொலை மற்றும் உணவு டிரோன்களின் சோதனையை கிம் மேற்பார்வையிட்ட ஒரு மதத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வட கொரிய கடற்படை “தேசிய பாதுகாப்பிற்கும் அணுசக்தி போர் தடுப்புக்கும் முக்கிய அங்கமாக” செயல்படும் நிலையில், இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முழுமையாகப் பயன்படுத்தத் தயாராகும் என கிம் தெரிவித்தார்.
நாம்போ பகுதியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் கிம் மற்றும் அவரது மகள் ஜூ ஏ கலந்து கொண்டு, போர்க்கப்பலின் திறனை நேரில் பார்வையிட்டனர்.
அணுசக்தி ஆயுதங்களை வலியுறுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வட கொரியா தன்னை “பழம் வாய்ந்த அணு ஆயுத நாடு” என்று அறிவித்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளை எதிர்த்து, புதிய அணு தற்காப்பு உத்தியைக் கட்டமைக்கும் முயற்சியாக இந்த போர்க்கப்பல் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எதிர்காலத்தில் வட கொரியா-அமெரிக்க பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தும் முன் நிபந்தனைகளை உருவாக்குவதற்காகவே கிம் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.