
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது.
குறிப்பாக இந்தியாவில் வாழும் பாகிஸ்தானியர்களை இன்றைக்குள் வெளியேற வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா எங்கள் மீது பழி சுமத்துகிறது.
நாங்கள் நடுநிலையான விசாரணையில் பங்கேற்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய அமைச்சரும் மேற்கு வங்க மாநில பாஜக தலைவருமான சுகந்தா மஜூம்தார் கூறியதாவது, பாகிஸ்தான் என்ன விசாரணை செய்வார்கள். ஒரு திருடன் தான் செய்த திருட்டை எப்போதாவது விசாரிக்க முடியுமா?.
பாகிஸ்தான் பிரதமர் பயத்தில் இதை சொல்கிறார். இந்த பயம் நல்லது, அவர்களுக்கு இந்த பயம் இருக்க வேண்டும். பாகிஸ்தான் தயாராக இல்லாத போது அவர்களை தாக்குவோம். அவர்களை கடுமையாக தாக்குவோம் என்று சுகந்தா மஜூம்தார் தெரிவித்தார்.