திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(35). இவரது மனைவி தாரணி(30). இவர்களது மகன் சைலேஷுக்கு 3 வயது ஆகிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியான தாரணி 2-வது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் சைலேஷ் தனது தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். நேற்று முன்தினம் கார்த்திக்கின் தங்கை அட்சயா ஸ்ரீ சைலேஷுக்கு உணவு ஊட்டிய போது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் திருச்சி அரியமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சைலேஷை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சைலேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.