திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு முந்தைய நாட்கள் மற்றும் பிந்தைய நாட்கள் காலையில் கடல் நீர் உள் வாங்குவது வழக்கமாகும்.

இந்நிலையில் நேற்று அம்மாவாசை தினம் என்பதால் இன்று 2-வது நாளாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் சுமார் 80 அடி நீளத்திற்கு கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராட முடியாமல் ஏமாற்றம் அடைத்தனர். மேலும் ஆபத்தை உணராமல் கடற்கரையில் தெரியும் பாசிகள் மீது நின்று புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.