
தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளை சி.பி.எம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து மார்சிஸ்ட் மாநில செயலாளர் பே. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது, அரசு ஊழியர் நலனுக்காக முதல்வரின் அறிவிப்புகளை சிபிஎம் வரவேற்கிறது. பல்லாண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இவை நம்பிக்கையூட்டும் அறிவிப்புகள் ஆகும் என்று கூறியுள்ளார்.