தமிழகம் முழுவதும் நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் மக்கள் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அன்றைய தினங்களில் மட்டும் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நாளை சித்திரை மாதத்தில் விசேஷ நாள் என்பதால் கூடுதல் டோக்கன் வினியோகிக்கப்பட இருக்கிறது. அதன்படி நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 100-க்கு பதில் 150 டோக்கன் விநியோகிக்கப்படும். அதன் பிறகு இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 300 டோக்கன்கள் வரை விநியோகிக்கப்படும். மேலும் சாதாரண முன்பதிவு வில்லைகளோடு 4 தட்கள் முன்பதிவு வில்லைகளும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.