தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமா என்ற பெண் தன்னுடைய மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடித்து தாக்குகிறார். அந்தப் பெண் சிறுவன் என்றும் பாராமல் வீட்டு வாசலுக்கு வெளியே தன்னுடைய மகனை தரையில் தூக்கி அடித்து கொடூரமாக அடிக்கிறார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் அப்பகுதி மக்கள் கூறும் போது தினசரி மகனை இப்படித்தான் ரமா அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுவனை மீட்டு பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக அனுமதித்துள்ளனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. இந்த பெண்ணின் கணவர் வேலை நிமித்தமாக துபாயில் இருக்கிறார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.