
கடந்த 2015 ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு எம்.எம் கீரிவானி இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் உலக அளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இத்திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் ரீ ரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு தற்போது பதில் அளிக்கும் வகையில் படக்குழு, பாகுபலி பாகம் 1 திரைப்படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் வெளியிடுவதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இப்படத்தின் ரீரிலீஸும் மாபெரும் வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.