வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் சரத்குமார் (34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இவர் விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி அமைப்பாளராக இருந்தார்.

இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சிலருக்கும் சரத்குமாருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை அரிவாளால் வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சரத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இந்த சம்பவத்தினால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சம்பந்தப்பட்ட ஹாஸ்பிடலில் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அரியூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.