மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இனி திரும்ப பெற முடியாது. ரிசர்வ் வங்கியை கலந்து ஆலோசித்த பிறகே ஒன்றிய அரசு பணமதிப்பிழப்பு முடிவை எடுத்துள்ளது.

ஒன்றிய அரசு மேற்கொண்ட பண மதிப்பு நடவடிக்கையில் தவறு ஒன்றும் இல்லை. செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுகளை மாற்ற 52 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது போதாது என கூற முடியாது. பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்ட நடைமுறையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி ரத்து செய்ய முடியாது என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.