மதுரை திருமங்கலத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மகன் சென்னையில் உள்ளார். இந்த தம்பதியினர் தனது வீட்டில் 2 வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்சி ராணி மொட்டை மாடியில் தான் காய வைத்த துணியை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நாயின் அருகே இருந்த துணியை எடுக்க முயன்ற போது, திடீரென அதில் ஒரு நாய் ஜான்சிராணி மீது  பாய்ந்து கடித்துக் கொதறியது.

இதில் அவரது இடது கை பலத்த காயமடைந்தது, கையில் எலும்புகள் தெரியும் அளவிற்கு குதறியுள்ளது. இதையடுத்து அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். இருப்பினும்  நாய்க்கு பயந்து யாரும் ஜான்சி ராணியை காப்பாற்ற முன்வரவில்லை. பின்னர் ஜான்சி ராணி தப்பித்து கீழே இறங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.