
கல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் சஞ்சய் ராயின் ப்ளூடூத் ஹெட்செட் சம்பவம் நடந்த மருத்துவமனையில் செமினார் ஹாலில் கண்டெடுக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் சஞ்சய் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் கவிதா சர்க்கார் சில விவரங்களை ஊடகத்திற்கு கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் 10 கேள்விகள் கேட்டனர். இந்த நிலையில் பெண்ணை கொலை செய்த பிறகு என்ன செய்தாய் என கேள்வி எழுப்பியதற்கு, நீங்கள் கேட்கும் கேள்வியை தவறு. நான் கொலை செய்யவில்லை என்று சஞ்சய் ராய் கூறியுள்ளார். மேலும் தான் செமினார் ஹாலுக்குள் செல்லும்போது அந்த பெண் சுயநினைவு இன்றி கிடந்ததாகவும் அவர் கூறியது அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.
சம்பவம் நடந்ததாக சொன்ன ஆகஸ்ட் 9- ஆம் தேதி இரவு செமினார் அரங்கதுக்குள் நுழையும் போது அந்த பெண் சுயநினைவு இன்றி மயக்க நிலையில் இருந்ததாகவும், அவர் மீது ரத்தம் படிந்து இருந்ததாகவும் கூறியுள்ளார். எனவே பயத்தில் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்து விட்டேன் என சஞ்சய் கூறியதாக கவிதா சர்க்கார் தெரிவித்துள்ளார். ஏன் போலீசார் கைது செய்யும் போது இதனை கூறவில்லை என கேள்வி கேட்டதற்கு பதிலளித்த கவிதா சர்க்கார் அப்போது சஞ்சய் ராய் பயத்தில் இருந்துள்ளார்.
எனவே தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று நினைத்ததாக கூறியுள்ளார். சஞ்சய் ராய் எளிதாக செமினார் அரங்கத்திற்குள் நுழைய முடிந்தது என்றால் அவருக்கு முன்பாகவே பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி வேறு யாரோ உள்ளே நுழைந்துள்ளனர் என்று அர்த்தம். எனவே உண்மையான குற்றவாளியை வேறு எங்கே ஒளிந்துள்ளார் என கவிதா சர்க்கார் கூறியுள்ளார்.