நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அருகே கவர்னர் சோலை பகுதியில் வசித்து வந்தவர் கேந்தர் குட்டன். இவர் தோழர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் எருமை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாள் அன்று வழக்கம் போல கேந்தர் குட்டன்  எருமைகளை மேய்க்க கவர்னர் சோலை வனப்பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அப்பகுதி முழுவதும் கேந்தர் குட்டனை தேடி உள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை வனப்பகுதியில் அவரது உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கொடூரமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கேந்தர் குட்டனின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், அவர் புலி தாக்கியதில் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் அப்பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.