
மலையாளத் திரை உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சனல் குமார் சசிதரன். இவர் ‘ஒழிவுதெவசத்தே களி’, ‘செக்ஸி துர்கா’ போன்ற பல சுயதீன படங்களை இயக்கியுள்ளார். இதன் மூலம் அவர் பிரபலமானார். இந்நிலையில் அவர் மீது மலையாள நடிகை ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சமூக வலைதளங்களில் அவர் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக கூறியிருந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதை அவரே தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, அந்த நடிகையின் பெயரில் வேற யாரோ தனக்கு எதிராக புகார் அளித்துள்ளதாக கூறினார். இவ்வாறு அவர் மீது புகார் வருவதை இது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பு கடந்த 2022ம் ஆண்டு இதே நடிகை அவர் மீது புகார் அளித்திருந்தார். அதில் இயக்குனர் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.