
ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்
ராயல் ராஜஸ்தான் என்பது ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்(RTDC) மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சி ஆகும். இந்த ரயில் நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது ஆக்ரா, கஜுராஹோ, வாரணாசி ஆகிய இடங்களையும் ராஜஸ்தானின் அரண்மனை நகரங்கள் வழியாகவும் பயணிக்கும்.
ராயல் ஓரியண்ட்
கடந்த 1994-95ல் குஜராத் சுற்றுலா கழகம் மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலுள்ள பாரம்பரிய நகரங்களின் வழியாக பயணிக்கிறது. இந்த ரயில் வாயிலாக டெல்லி, சித்தோர்கர், உதய்பூர், ஜுனகர், வெராவல், சோம்நாத், சாசன் கிர் தேசிய பூங்கா, அகமதுபூர், மாண்ட்வி, பாலிதானா, சர்கேஜ், அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்கு போகலாம்.
பேலஸ் ஆப் வீல்ஸ்
உலகத்தரம் வாய்ந்த விருந்தோம்பல் பயணத்தினை வழங்கும் முதல் சொகுசு ரயில் இது. இந்த ரயில் ராஜஸ்தான் சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மகாராஜா எக்ஸ்பிரஸ்
இந்த எக்ஸ்பிரஸ் IRCTC அறிமுகம் செய்த முதன்மை சொகுசு ரயிலாகும். டீலக்ஸ் கேபின்கள், ஜூனியர் சூட் கேபின்கள், சூட்கள் மற்றும் பிரசிடென்சியல் அறைகள் ஆகிய வசதிகளை உள்ளடக்கிய 23 கேரேஜ்-நீள ரயில். முதலாவது செங்கோட்டையிலுள்ள அசல் ரங் மஹாலின் கருப் பொருளை அடிப்படையாக கொண்டது மற்றும் 2-வது இந்தியாவின் தேசிய பறவையான மயிலை அடிப்படையாகக் கொண்டது.