
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதன் பிறகு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் இதேபோன்று ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.