பீகார் மாநில சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் விஜய் சிம்ஹா புலம்பெயர்ந்த பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் பாஜக எம்எல்ஏக்கள் பீகார் மாநில மக்களை குறித்து பீகார் அரசு கவலைப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியின் சட்டப்பேரவை முன்பாக அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ் யாதவ், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளில் எவ்வாறு கலந்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது பற்றி வெளியான வீடியோக்கள் போலியானது. இந்த வீடியோக்கள் உள்ளூர் மக்களுக்கும் வட இந்திய இந்தி பேசும் மக்களுக்கும் நடைபெற்ற மோதல். அதனை புலம்பெயர்ந்த தொழிலாளர்களோடு சம்பந்தப்படுத்தி பேசுவது தவறானது” என தெரிவித்துள்ளார்.