
செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, விஜயலட்சுமி அவங்க என்கிட்ட உதவி கேட்டு, என்கிட்ட அடைக்கலம் வர வரைக்கும் கரெக்டான நிலையில்தான் இருந்தாங்க. எப்போ வளசரவாக்கம் AC அவங்களை தொடர்பு கொண்டு விஜயலட்சுமி அவர்கள் கிட்ட பேசினார்களோ, அந்த நிமிஷத்துல இருந்து பாத்தீங்கன்னா… விஜயலட்சுமி அவங்களுடைய நடவடிக்கை எல்லாம் மாறி இருக்கு.
ஏன்னு கேட்டீங்கன்னா… நாம் தமிழர் கட்சியில் இருக்கின்ற சாட்டைதுரைமுருகன் என்ற நபர், அவனுடைய கைபேசியில் இருந்து தமிழா பாண்டியன் என்ற மூத்த பத்திரிகை ஆசிரியருடைய நம்பருக்கு நள்ளிரவில் பச்சை பச்சையா பேசி இருக்கிறாங்க. சாட்டை துறைமுருகன் என்கிறவர் தமிழா பாண்டியன் அய்யா அவர்களை தொடர்பு கொண்டு,
அவங்க அம்மா, அக்கா, பொண்டாட்டி எல்லாரையும் இழிவு செஞ்சிருக்காங்க. அந்த நம்பர எனக்கு அனுப்புச்சாரு. அந்த நம்பருக்கு எனது அலுவலகத்தில் இருந்து என் தம்பிமார்கள் தொடர்ந்து பத்து, பதினைந்து போன் போட்டாங்க. ஆனால் யாரும் அந்த நம்பர்ல எடுக்கல. அந்த நம்பர் யாரு அப்படின்னு பார்க்கும்போது… சாட்டை துரைமுருகனோட நம்பர்னு தெரிய வந்துச்சு.
சாட்டை துரைமுருகன் அவரோட சமூக வலைதள பேஸ்புக்ல இந்த நம்பர் யாராயிருக்கும் அப்படின்னு போட்டதில்ல… இந்த நம்பர் விஜயலட்சுமி நும்பரும் இல்லை. வீரலட்சுமி நம்பரும் இல்லை. கணேசன் என்பவருடைய நம்பர் இது. அப்போ சாட்டை துரைமுருகனுக்கும், தமிழக முன்னேற்ற படையை சேர்ந்த கணேசனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு.
அப்படின்னு சமூக வலைதளத்தில் விஜயலட்சுமியை இந்த பதிவை போட சொன்னது யாரு ? ஏன்னா ஏசி அவர்கள் தொடர்பு கொண்டு விஜயலட்சுமியுடன் பேசினதுக்கு பிறகு தான் விஜயலட்சுமி அவர்களுடைய நடவடிக்கை மாறி இருக்கு.
விஜயலட்சுமிக்கு வீரலட்சுமிக்கும் சண்டை அப்படின்னு சிறிய தகப்பனாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வளசரவாக்கம் ஏசி கௌதமன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்ப வீரலட்சுமிக்கு, விஜயலட்சுமிக்கு சண்டை வரணும் அப்படின்னு வளசரவாக்கம் ஏசி கெளதம் அவர்கள் நினைக்கிறார். தினம்தோறும் விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு பேசுற வளசரவாக்கம் ஏசி அவர்களுக்கு அக்கறை இருந்தா விஜயலட்சுமியை உங்க வீட்ல கொண்டு போய் வச்சுக்கோங்க என தெரிவித்தார்.