அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவி ஆய்வு செய்தார்.

அவர் அங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் ஆய்வு செய்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உள் விசாரணை குழுவிடமும் ஆய்வு நடத்தினார். அதன் பின் அங்கு உள்ள 25 மாணவர்களின் கருத்துக்களை ஆளுநர் கேட்டறிந்தார். இதையடுத்து பல்கலைக்கழக மாணவிகளின் பாதுகாப்பு, காவலர்களின் பாதுகாப்பு பணி குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் இவருடன் உயர்கல்வித்துறை செயலாளர் கோபால் மற்றும் தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம் உள்ளிட்டோர் இருந்தனர்.