தென்கொரியாவின் வான் பகுதிக்குள் திடீரென மொத்தம் 11 ராணுவ விமானங்கள் புகுந்தது. அதில் 5 சீன  விமானங்கள் மற்றும் 6 ரஷ்ய விமானங்கள் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து தென்கொரியாவின் ராணுவம் போர் விமானங்களை ஏவியது. இதனால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த 11 விமானங்களும் கிட்டத்தட்ட 4 மணி நேரமாக தென்கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமிட்டது.

அதையடுத்து அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியது. இதுபோன்று முன்அறிவிப்பின்றி சீன மற்றும் ரஷ்ய இராணுவ விமானங்கள் தென்கொரியா வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு சீன மற்றும் ரஷ்ய ராணுவ விமானங்கள், தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் செல்வது சமீப காலங்களில் அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.