அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-க்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சமன் அனுப்பி இருக்கிறது.

அதிமுகவினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னைப் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்கள் தமக்கும், தமது நற்பயிருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கே.சி பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் , கே.சி பழனிச்சாமி மனுவை தள்ளுபடி செய்த ஜார்ஜ் டவுன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும்,  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை டவுன் நீதிமன்றத்தில் கே.சி பழனிசாமிாமி தொடர்ந்து வழக்கு நீதிபதி டி திருமால் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆஜராகும்படி சமன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்.