மும்பை உயர்நீதிமன்றம், தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர், தன்னுடைய இரண்டு சிறிய மகன்களை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் வலுஞ்சே என்பவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.ஜி. அவச்சாட் மற்றும் நீரஜ் தோட்டே ஆகியோர் அடங்கிய அவுரங்காபாத் கிளை அமர்வு, சந்தோஷ் வலுஞ்சேவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி, குடும்ப தகராறுக்குப் பிறகு தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய வலுஞ்சே, அடுத்த நாள், நான்டேட் மாவட்டம் சாவர்கேட் என்ற கிராமத்தில் உள்ள விவசாயிக்குச் சொந்தமான கிணற்றில் அந்த இரண்டு குழந்தைகளின் உடல்கள் மிதந்த நிலையில் மீட்கப்பட்டன.

விசாரணையில், அவர் தனது குழந்தைகளுடன் பல இடங்களில் சென்றதும், உறவினர்களை சந்தித்ததும், சிலர் அவருடன் குழந்தைகள் இருப்பதைக் கண்டதும் தெரியவந்தது. உடற்கூறு பரிசோதனையில் குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தது உறுதியாகியிருந்தது.

வழக்கறிஞர் வழக்கு முற்றிலும் சூழ்நிலைக் காவலான ஆதாரங்களில் மட்டுமே உள்ளது என வாதிட்டாலும், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. “தந்தை தான் குழந்தைகளுடன் சென்றுள்ளார், அவர் அவர்களிடமிருந்து எப்போது பிரிந்தார், என்ன செய்தார் என்பதற்காக எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

எனவே, அவர் தான் கிணற்றில் குழந்தைகளை தள்ளி கொலை செய்ததாகத் தான் முடிவிற்கு வர முடியும்,” என நீதிபதிகள் கூறினர். எனவே, முதன்மை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை செல்லும் என உத்தரவிட்டது.