
கொரோனா காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழை மக்களுக்கு நிதியுதவி, பேருந்து வசதி உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி பெரும் பங்காற்றியவர் தான் பாலிவுட் நடிகர் சோனு சூட். இதன் காரணமாக சோனு சூட் நாடு முழுவதும் பிரபலமடைந்தார். மேலும் அறக்கட்டளை ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். அதுமட்டுமின்றி திரைப்பட ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவ தனி மையம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் மீது தாங்கள் வைத்துள்ள அன்பை தெரிவிக்கும் வகையில் மத்தியபிரதேசம் தேவாஸ்ல் ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியை பயன்படுத்தி சோனு சூட் உருவத்தை ரசிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வரைந்து இருக்கின்றனர். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் செயலால் நெகிழ்ச்கியடைந்த சோனு சூட் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த அரிசி முழுவதும் ஏழ்மை நிலையிலுள்ள பல்வேறு குடும்பங்களுக்கு என்.ஜி.ஓ (NGO) வாயிலாக அனுப்பிவைக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பாராட்டுகளும் குவிந்து வருகிறது..