
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸிக்கு 88 வயது ஆகின்ற நிலையில் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனை கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். இருப்பினும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரோம் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. முன்னதாக இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரி செய்வதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.