
தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாற்றும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும்.
அதன்படி தொடர்ந்து முன்னிலை வகித்த பாஜக பெரும்பான்மையை கடந்து வெற்றியை உறுதி செய்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சட்டமன்ற தேர்தலில் பாஜக கட்சி 48 இடங்களை கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி 22 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. மேலும் டெல்லியில் பாஜக கட்சியில் முதல்வராக மூவர் போட்டியிடுவதாக கூறப்படும் நிலையில் நாளை அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இருக்கிறார்கள்.