பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடை பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் தற்போது திடீரென அவரை தகுதி நீக்கம் செய்து அறிவித்துள்ளனர்.

அதாவது வினேஷ் போகத் 100 கிராம் எடைஅதிகமாக  இருந்ததாக கூறி அவரை தகுதி நீக்கம் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஒலிம்பிக் கூட்டமைப்பு விக்னேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்தது மிகவும் வருத்தத்தை தரக்கூடிய விஷயமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்