நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் திரும்பத் திரும்ப சொல்றேன். அவன தூக்கி வீசு. 31  லட்சம் சட்டசபையில் வச்சிருக்கேன். இப்ப எத்தனை லட்சம் என்று எனக்கே தெரியாது. நான் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு,  உங்களை ஆதரிக்கிறேன்னு சொல்றேன்.

காங்கிரஸை விட பெரிய கட்சி நானு..  உன்னை விட பெரிய கட்சி நான் தான் என் ஸ்டேட்ல…  காங்கிரஸ் இத்தாலியில் இருக்கா ? நாம் தமிழர் இத்தாலியில் இருக்கு.பிஜேபி காங்கிரஸ் ஏன் நிலத்துக்கு எதுக்கு ? அந்தக் கட்சி தேவை என்றால் ?  நீ எதுக்கு திமுக ஆரம்பிச்ச. ஏன்னா உங்களுக்கும்,  எனக்கும் நடக்கின்ற சண்டை அண்ணன் தம்பி சண்டை, பங்காளி சண்டை. அதுல காங்கிரஸோ பிஜேபியோ வந்தா ? ஒடஞ்சிடும் மண்டை. இது தான் என் கோட்பாடு..

திமுகவை ஆதரிப்பவர்கள் சொல்லுவது பாவியாக இருந்தாலும்… பாவியாக இருந்தாலும்,  அந்த காவிய எதிர்க்க இந்த பாவி தானே தேவைப்படுகிறான். எதுக்கு காவியை பாவி வச்சி எதுக்கின்ற.. தூய ஆவி என்னை வைத்து எதிர்த்துட்டு போ. அரசியல் சாசனத்தில் இருக்கிறது..  அண்ணல் அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த அரசியல் சாசனத்தில் இருக்குது..

பெரும்பான்மை மக்களுக்கு நீங்க கொடுத்த முன்னுரிமை, பின்னுரிமை…  இங்க வாடா…  எத்தனை பேர் வச்சிருக்க ? ஒண்ணுத்துக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப வெச்சி இருப்பான். நீட்ன  நேரத்தில, காட்டுன இடத்துல கையெழுத்து. டாக்டர் ஜாகிர் உசேன வச்ச, அப்புறம் எங்க ஐயா அப்துல் கலாம்மை வச்ச.  ஏன் ஒரு தடவை பிரதமர் ஆக்கேன் ? இப்ப நான் என்ன சொல்றேன் என தெரிவித்தார்.