
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக சமீபகாலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்கு தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது தமிழகத்தில் அரசு பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமில்லை. மேலும் அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக வரும் செய்திகள் முற்றிலும் வதந்தி. எனவே பொதுமக்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம். தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தாது என்று கூறியுள்ளார்.