
தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும்.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஸ் ஷர்மா 8290 வாக்குகளும், அரவிந்த் கெஜ்ரிவால் 6853 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் 3687 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதேபோன்று ஆம் ஆத்மி வேட்பாளர் மணிஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவரும் பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் அதிஷியும் பின்னடைவை சந்தித்துள்ளார்.