நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. அப்போது திமுக எம்பிக்கள் தமிழ்நாடு கல்வி நிதி மறுப்பு விவகாரம் பேசியுள்ளனர். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கூறியதாவது, பாஜக ஆளாத மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், கர்நாடகாவில் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டது.

தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்பிக்கள் நாகரீகமற்றவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள் என்று கூறினார்.

அவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்ததால் சிறிது நேரத்திலேயே தான் பேசிய வார்த்தையை திரும்ப பெறுவதாக கூறினார். அதன் பிறகும் ஒன்றிய அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் எனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் என கூறியுள்ளார்.