
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 27 சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு பின், இந்தியா முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தான் தற்போது கராச்சி கடலோரப் பகுதியில் தரையில் இருந்து இலக்குகளை தாக்கும் ஏவுகணை சோதனை இன்று மற்றும் நாளை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும் பாகிஸ்தான் அரசு போர் விமானங்களை எல்லையில் நிறுத்தி வைக்க போவதாக தகவல் வெளியானதால் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக இந்திய கடற்பரப்பில் இந்தியா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
கராச்சி கடற்பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த உத்தரவிட்ட நிலையில் இந்தியா அதிரடி காட்டியுள்ளது.