மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக அந்த மாவட்டத்தில் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக இந்த இரண்டு தாலுகாக்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூன் 29 இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.