
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒரு நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சாராய வியாபாரி கோவிந்தராஜனிடம் பாக்கெட் சாராயம் வாங்கிக் குடித்த 33 பேர் இதுவரை பலியாகிய நிலையில், 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இது தொடர்பாக கோவிந்தராஜன், தாமோதரன் ஆகியோர் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், தற்போது கோவிந்தராஜனின் மனைவி விஜயாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.