
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4:40 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது இந்துகுஷ் மாகாணத்தில் உள்ள பக்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 24 km ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கதால் அந்த பகுதியில் கட்டிடங்கள் அதிர்ந்தது.
இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. குறிப்பாக டெல்லி உட்பட வட இந்தியாவில் அதிர்வு காணப்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது