நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகளின் விசாரணையானது பல மாதங்கள் நீடிப்பதும், அதன்பின்புபல மாதங்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்படும் நிலையானது தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் புதிதாக அமலுக்கு வந்துள்ள மூன்று கிரிமினல் சட்டங்களின்படி, கிரிமினல் வழக்குகள் மீதான விசாரணை முடிந்த நாளில் இருந்து 45 நாள்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.