தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் என்பது அரங்கேறி வருகிறது. நேற்று இரவு எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி‌ ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களை கைது செய்ததோடு 2 விசை படகுகளை  சிறை பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி கைது செய்ததோடு ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யும் நிலையில் இன்று குடியரசு தின விழாவில் 33 மீனவர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.