நாடு முழுவதும் ஜியோ நிறுவனம் செல்போன் கட்டணத்தை 12-25% வரை உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை 189ரூபாய்  ஆகவும், 28 நாள்களுக்கு 299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் 349 ரூபாய் ஆகவும், 399 என்ற மாதாந்திரக் கட்டணம் 449 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜியோவின் வரம்பற்ற 5G திட்டம் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.