தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி-க்கு தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரபாகரன் டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவர் தற்போது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவர் அடுத்து வரும் 2028 ஆம் ஆண்டு வரை டிஎன்பிஎஸ்சி தலைவராக பொறுப்பு வகிப்பார் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.