
தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும்.
இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவான ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி என்பது உருவாகியுள்ள நிலையில் ஆட்சி அமைக்க 36 இடங்களில் வெற்றி தேவை.இந்த நிலையில் தற்போது பாஜக 50 இடங்களில் முன்னிலை வகித்து அரை சதம் அடித்துள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.மேலும் டெல்லி தேர்தலில் நொடிக்கு நொடி முன்னிலை நிலவரம் என்பது மாறிவரும் நிலையில் மதுபான ஊழல் கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி சிக்கியது தான் தொடர் சறுக்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.