![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/06/550132-1.jpg)
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 500க்கும் குறைவான குடும்ப அட்டைகள் இருக்கும் இடங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 997 பகுதி நேர ரேஷன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் மக்கள் பயணிக்காமல் இருக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினார்.