தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள் உட்பட பல்வேறு ஊராட்சிகள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் பல ஆண்டுகாலமாக புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சட்டசபை கூட்ட தொடரின் போது 86,000 பேருக்கு பட்டா வழங்க ஒப்புதல் வழங்கினார்.

அதன்படி புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் நில ஒதுக்கீட்டு வரம்புகளையும் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.