
தமிழகத்தில் மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வருகின்ற ஜூன் 11 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி ஜூன் 18 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வட்டார அளவிலான பயிற்சியை ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்து முறை என்பது விளையாட்டு முறையை பின்பற்றி கற்பித்தல் ஆகும்.