
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் ஈசிஆரிலுள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் சுமார் 2500 நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் இன்று காலை திடீரென ஒருவர் செருப்பை தூக்கி வீசியுள்ளார். அவரை அங்கிருந்த காவலாளி உடனடியாக தடுத்து நிறுத்தினார். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் செருப்பு வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.