
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அக்.25ம் தேதி அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் சாகு ஆலோசனை மேற்கொள்கிறார். வரைவு வாக்காளர் பட்டியல், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படும் இக்கூட்டத்திற்கு திமுக, அதிமுக, பாமக, நாதக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அக்.27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.