தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் அவர்களை காங்கேயன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதோடு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படையினர் வெட்டி வீசியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னதாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர். அதாவது சமீபத்தில் மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் இது போன்று  இலங்கை கட்டப்படையினர் தொடர்ந்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அட்டூழியம் செய்து வருவதோடு அவர்களை கைது செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.